Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான்- விஜயபிரபாகரன்

பிப்ரவரி 07, 2021 08:57

வடமதுரை: தே.மு.தி.க. சார்பில் வடமதுரையில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அய்யலூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது விஜயகாந்த் உடல் நிலை தேறி வருகிறார். தேர்தலுக்கு முன் பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடுவார். குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான். லட்சக்கணக்கான தொண்டர்கள்தான் அவர் சேர்த்து வைத்த சொத்து. இன்று வரை ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. மேலும் தேர்தல் வாக்குறுதியில் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறியவரும் அவர் மட்டுமே.

என்னை கத்துக்குட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் சிங்கத்தின் குட்டியாக உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். எனது ரத்தத்தில் தே.மு.தி.க. கட்சிக் கொள்கை உள்ளது. வரும் வழியில் விஜயகாந்த் பாடல்கள் ஒலித்தது. இதே போல் கோட்டையில் மீண்டும் விஜயகாந்தின் குரல் நிச்சயம் ஒலிக்கும். இதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று விஜயபிரபாகரன் பேசினார். 

தலைப்புச்செய்திகள்